வீடியோ பாருங்கள் :ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் ஓடும் புதிய மோட்டார் சைக்கிள்.


ரியோடிஜெனிரோ:

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரை சேந்ர்தவர்  ரிக்கேர்டோ ஆஸேவெடோ. ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி ஓடக் கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.

டி பவர் ஹெச்20 என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ளஇதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கிறது.

News source : daily thanthi

Comments